ஞாயிறு, 8 நவம்பர், 2009

அழகான காலைப்பொழுது

ஒவ்வொரு நாளும் விடிகிறது ஒவ்வொரு மாதிரியாய். ஆனால் எல்லாக் காலைப்பொழுதுமே ரம்மியமானதுதான். விடியற்காலை எழுந்து வீடு வாசல் பெருக்கிக் குளித்து உற்சாகம் அடையும் பாங்கு குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. ஒன்று மிகவும் அதிகாலை எழுந்து ஓடி விடிகிறோம். அல்லது போர்வையினுள் தூங்கி விடுகிறோம். வாழ்க்கை மாறி விட்டது உண்மை தான். ஆனால் அதை இன்னும் சிறிதளவேனும் பழமை மாறாமல் வைத்திருந்தோமானால் உடலும் மனமும் உற்சாகமாய் இருக்கும் . ஐந்தரை மணிக்கே எழுந்து விட்டால் உடல் நலக் குறைவுள்ளவர்கள் கூட அந்த நாளின் வித்தியாசத்தை உணர முடியும். முடிந்தவரை வீட்டில் உணவு செய்து சாப்பிடுங்கள். உணவு மேஜையை சுத்தமாக வைத்திருங்கள். நாம் வழி வழியாகச் சாப்பிட்டு வந்த உணவையே சமையுங்கள். மகிழ்ச்சியோடு அருந்துங்கள். அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக