ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

மன அறை


வீணை பிடிக்குமோ அதன் இசை கட்டாயம் பிடிக்கும். சில பொழுதுகள் இனிமை சேர்க்கும். எல்லோருக்கும் மனதின் உள்ளே ஒரு மனம் இருக்கும். தனியறை. இது வரை யாருக்கும் எதற்காகவும் திறந்து விடப்படாத அறை. நமக்கே நமக்கென்று ஓர் அறை. அதன் வாயில்கள் தாழிடப் பட்டு இருந்தாலும் நாம் மட்டும் போய் வரலாம் நம்மையும் அறியாமல். அதனுள்ளே என்றென்றும் இழைந்து உருகி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நாதம்...